விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே கோப்பை தொடர். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 5ல் துவங்கவுள்ளது.
ஹர்பஜன் அதிர்ஷ்டம்:
இதில் பங்கேற்கும் அணியை பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. அதில் ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி தனது முதல் லீக் போட்டியில் ஹரியானா அணியை வரும் 7ம் தேதி எதிர் கொள்கிறது.
யுவராஜ் நம்பிக்கை:
தற்போது சர்வதேச அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவரும் யுவராஜ் சிங் இத்தொடரில் அசத்தும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அணி விவரம்:
ஹர்பஜன் சிங் (கேப்டன்), யுவராஜ் சிங் (துணைக்கேப்டன்), மனான் வோஹ்ரா, மந்தீப் சிங், குர்கீரத் சிங் மான், அபிஷேக் கும்தார், கிதான்ஷ் கேரா, சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, அபிஷேக் சர்மா, சுப்மான் கில், மன்பிரீத் சிங் கீர்வால், பரிந்தர் சிங் சரண், மாயங்க் மார்கண்டே, சராத் லம்பா.