“நோட் பண்ணிக்கோங்க” இந்தியாவில் இவரும், இங்கிலாந்தில் அந்த வீரரும் டி20 உலககோப்பையில் அசத்துவார்கள் – முன்னாள் வீரர் உறுதி!

டி20 உலக கோப்பை தொடரில் இந்த இரண்டு வீரர்கள் தங்களது அணிக்காக மிகச்சிறப்பாக செயல்படுவார்கள் என்று தென்னாபிரிக்காவின் லேஜண்ட் ஜாக்பாட் காலிஸ் வேட்டி அளித்துள்ளார்.

டி20 உலக கோப்பை காய்ச்சல் கிரிக்கெட் உலகில் அதிவேகமாக பரவி வருகிறது. இன்னும் இரண்டு வார காலங்களில் உலகக்கோப்பை நடக்க இருக்கின்றன. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் இத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்திய அணி அக்டோபர் 5ம் தேதி மாலை மும்பையில் புறப்பட்டு மெல்போன் மைதானத்திற்கு செல்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மெல்போன் மைதானத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அணிகள் பற்றி வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மற்றும் இங்கிலாந்தின் பென்ஸ் ஸ்டோக்ஸ் இருவரையும் குறிப்பிட்டு இவர்கள் இருவரும் தங்களது அணிக்காக இந்த வருடம் டி20 உலக கோப்பையில் மிக சிறப்பாக செயல்படுவார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் தென் ஆப்பிரிக்காவின் லெஜெண்ட் ஜாக்வேஸ் காலில். அவர் கூறுகையில்,

“ஹர்திக் பாண்டியா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் உலகத்தரம் மிக்க ஆல்ரவுண்டர்கள் இருவரும் தங்களது அணிக்காக இன்றி அமையாத பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இருவரும் தங்களது அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறார்கள். மிக பெரிய பங்களிப்பை கொடுக்கவிருக்கிறார்கள். இந்த வருடம் டி20 உலக கோப்பையில் இவர்கள் இருவரும் தங்களது அணியின் தூண்களாக திகழ்வார்கள்.” என கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகள் தான் இந்த வருட டி20 உலக கோப்பையில் கவனிக்கத்தக்க அணிகளாக இருக்கும். இந்த வருடம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு மிகச் சிறந்த உலக கோப்பையாக அமையும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்.” என தனது கருத்தை தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.