இந்திய அணி ஏன் சுப்மன் கில்லை ஓரம் தள்ளிவிட்டு, மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுத்தது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது, இதில் 4ஆம் தேதி மோஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் புஜாரா, ரஹானே மற்றும் கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுத்தது.
கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே தனக்கு கொடுத்த வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகப் பிரமாதமாக இருந்தது.
இதில்,இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாததால், துவக்க வீரராக சுப்மன் கில் அல்லது மயங்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவரைதான் விளையாட வைக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருந்தது, இறுதியாக நடந்துமுடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை ஆனால் சுப்மன் கில் தான் இறுதியாக விளையாடிய 3 போட்டிகளில் 52,47,44 ரன்கள் அடித்து அசத்தினார்,இருந்தபோதும் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மயங்க் அகர்வாலை களமிறக்கியது.
இந்திய அணியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், சுப்மன் கில் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்று விளையாடவில்லை. குறிப்பாக ரஞ்சி கோப்பையில் கூட இவர் விளையாடவில்லை, தற்பொழுது சுப்மன் கில் நன்கு பயிற்சி செய்ய வேண்டும், 22 வயதாகும் இளம் வீரர் சுப்மன் கில் திறமையான வீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை எந்த வீரர் பார்மில் உள்ளார் என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மயங்க் அகர்வால் வெளிநாட்டு தொடர்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், இந்திய மைதானங்களில் இவருடைய பேட்டிங் வேற லெவலில் உள்ளது, ஆனால் மயங்க் அகர்வால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வேண்டும் அப்போதுதான் அவருடைய வாய்ப்பு உறுதியாகும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் ஹனுமா விஹாரி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு ஹனுமா விஹாரி உள்ளார் அவர் என்ன தவறு செய்தார்..?, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்,இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை இந்திய அணி கொடுக்க வேண்டுமென்றும் விகாரிக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.