நல்ல விளையாடனும்னு ஆசையிருந்தா இத பண்ணு… அர்ஜுன் டெண்டுல்கர்க்கு டிவிட்டரில் படம் போட்டு பாடம் எடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்..
பந்துவீச்சில் அர்ஜுன் டென்டுல்கர் செய்யும் தவறை சுட்டிக்காட்டி பாடம் எடுத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்.
நீண்ட காலமாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்க்கு 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஐபிஎல் தொடரை விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் போட்டியில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மும்பை அணியின் ரெகுலர் வீரர்களில் ஒருவராக இடம்பெறத்துவங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்ற அர்ஜுன் டென்டல்கரை புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற டெம்ப்லேட்ஸுடன் சமூக வலைத்தளம் வரவேற்றது.
ஆனால் அந்தப் பாராட்டு அந்தப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது, அதற்கு அடுத்த அடுத்த போட்டியில் இவர் மிகவும் மோசமாக பந்து வீசி ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த மோசமான பந்துவீச்சாளர் என்ற வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
இதனால் அர்ஜுன் டென்டல்கருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ரஷீத் லத்தீப்., தன்னுடைய twitter பக்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் செய்த தவறு குறித்து படம் போட்டு பாடம் எடுத்ததுடன் அவர் இளம்வீரராக இருப்பதால் கூடிய விரைவில் அந்த தவறிலிருந்து திருத்தி கொள்வார் என பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில்,“கீழே நான் பதிவிட்டுள்ள தவறுகளில் இருந்து முன்னேற்றம் அடைய வேண்டும், அவர் இளம் வீரராக இருப்பதால் நிச்சயம் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என தெரிவித்திருந்தார்.