சுப்மன் கில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக செயல்படுவார்! இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் நம்பிக்கை!

சுப்மன் கில் ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய ஏ அணி போட்டிகளில் நிறைய விளையாடி இருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் அவர் தற்போது தான் தனது கேரியரை துவங்கி உள்ளார். இதுவரை 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 378 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் அவரேஜ் 34.36 மட்டும் ஸ்ட்ரைக் ரேட் 58.7ஆகும். மூன்று அரை சதங்களையும் அவர் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் அதன் பின்னர் நடக்க இருக்கின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர் மிகச் சிறந்த வீரராக இந்திய அணிக்கு செயல்படுவார் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது கைகள் மிக வேகமாக செயல்படும்

தற்பொழுது மும்பையில் இரண்டு வாரங்கள் தனிமையில் இருந்து வரும் இந்திய வீரர்கள் இன்னும் சில நாட்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அங்கு சென்று மேலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் வருகிற 18-ஆம் தேதி எதிராக இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் தற்பொழுது தான் சுப்மன் கில் விளையாட ஆரம்பித்து இருக்கிறார். 21 வயதே ஆன அவர் ஒல்லியாக நல்ல பிட்டாக இருக்கிறார். வேகமாக ஓடக்கூடிய ஒரு வீரராக திகழ்கிறார்.

இவற்றையெல்லாம் தாண்டி அவரது கண்களும் அதற்கு ஏற்ப அவரது கைகளும் மிக வேகமாக செயல்படுகிறது. பந்தை சரியாக பார்த்து எந்த நேரத்தில் தனது கைகளை பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது சரியாக பயன்படுத்தி பந்தை லாவகமாக அடிக்க கூடிய யுத்தி அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அவருக்கான பயிற்சி முறையாக வழங்கப்படும்

எனவே அவரை நாங்கள் முடிந்தவரை எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடக்கூடிய வகையில் பயிற்சி கொடுப்போம். இங்கிலாந்து மைதானங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ஸ்பின் பவுலர்களுக்கு அவ்வளவாக வேலை இருக்காது. இருப்பினும் அஸ்வின் மற்றும் ஜடேஜா துணைகொண்டு ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை கில்லுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்து கொண்டு வருகிறோம்.

எனவே நிச்சயமாக இனி நடக்க இருக்கின்ற டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால், சுப்மன் கில் இந்திய அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை வழங்குவார் என்று இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.