நடுவர்களிடம் தெளிவாக கேட்க மைதானத்திற்குள் வந்தார் தோனி என்று கூறியுள்ளார் சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்லெம்மிங்.
நேற்றைய சென்னை vs ராஜஸ்தான் போட்டியில் விந்தையான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரை மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அவ்வாறு செய்தவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் “மஹேந்திர சிங் தோனி” வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தோனி அவுட் ஆகி வெளியேறியிருந்தார். 19வது ஓவரின் 4வது பந்தை வீசிய ஸ்டோக்ஸ், சாண்ட்நர் இடுப்பிற்கு மேல் வீசியதால் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி “நோ” பால் என சிக்னல் காட்டினார். ஆனால் நோ பால் வீசப்பட்டால் வழங்கக்கூடிய “ஃப்ரீ ஹிட்” வழங்கப்படவில்லை.
ரசிகர்கள் பலர் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி நோ பால் என தீர்ப்பு வழங்கியதை கிவனித்து இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் விதிகளின் படி இடுப்பு அளவிற்கு மேல் வரும் பந்தை “நோ பால்” என அறிவிக்கும் அதிகாரம் square leg திசையில் இருக்கும் இரண்டாவது நடுவருக்கே உண்டு. அந்த வகையில் நேற்று square leg திசையில் இருந்த நடுவர் ப்ருஸ் ஒக்ஸேன்ஃபோர்ட் அதை நோ பால் என அறிவிக்காமல் சரியான பந்து என கூறியதே அந்த குழப்பங்களிற்காண காரணம். இறுதியில் அதை சரியான பந்து என கிரீஸ் அருகே இருந்த நடுவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை உருவாகிவிட்டது.
அப்போது தான் அதை ஏன் நோ பால் என முதலில் அறிவித்து, பின்னர் சரியான பந்து என்கிறீர்கள் என தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்ன செய்கிறார் தோனி என சென்னை ரசிகர்களே ஒரு நிமிடம் திகைப்புக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிளெமிங், அந்த விஷயத்தில் எங்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டும். அம்பயர்களிடம் பேசி தெளிவை பெறுவதற்காகவே தோனி களத்திற்கு சென்றார். எல்லா விஷயங்களிலும் சரி-தவறு என்ற கருத்து இருக்கத்தான் செய்யும். ஆனால் நோ பால் என்று அறிவித்துவிட்டு பின்னர் அந்த முடிவிலிருந்து அம்பயர்கள் பின்வாங்கியதால் அதுகுறித்த தெளிவை பெறுவதற்காகவே தோனி களத்திற்கு சென்று அம்பயர்களுடன் பேசினார் என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.