மூன்றாவது போட்டி மைதானம் பேட்டிங் ஆடுகளமாகும், மேலும் இது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஒன்றாகும்

இந்திய அணி 3ஆவது ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலியவிற்க்கு எதிராக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நாளை சந்திக்கவுள்ளது. இந்த மைதனத்தின் ஆடுகளத்தின் தன்மையைப்பற்றி ஆடுகள பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகன் கூறியுள்ளார்.

ஆடுகளத்தை உருவாக்குவதற்க்கு கரிசல் மண்ணை பயன்படுத்தியுள்ளோம். அந்த மண் மத்தியப்பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது ஆகும்.

இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்க்கு சாதகமாக இருக்கும். கண்டிப்பாக இரு அணிகளும் அதிக ரன் குவிக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த காலநிலையில், இந்த மண் தான் சரியான ஒன்றாகும். கால்நிலலையப் பொருத்து இந்த் மண் மாறுபடுவதில்லை. எப்போதும் ட்ரை ஆகத்தான் இருக்கும். இதனால் குல்தீப் மற்றும் யுஜவேந்திர சகால் போன்ற மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்ப்பந்து வீசுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும், மழை அச்சுருத்தல் இருப்பதால் நாங்கள் துரிதமாக வேலை செய்யும் களப் பணியாளர்களுடன் தயாராக இருக்கின்றோம். தன்னீரை வெளியேற்ற 12 பம்ப்புகள் இருக்கின்றன. எளிதாக தண்ணீரை வெளியேற்ற இயலும்.

எனக் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், தங்களது பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை திறம்பட சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போய் விடுவதாக கூறியுள்ளார்.

கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 252 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி (92 ரன்), ரஹானே (55 ரன்) அரைசதம் விளாசினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அடங்கிப்போனது. 2-வது தோல்வியை சந்தித்த பிறகு

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறியதாவது

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் போட்டி மட்டுமல்ல, எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நெருக்கடியான கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்து நிலைகுலைந்து விடும் போக்கு சமீபகாலமாக அடிக்கடி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆஸ்திரேலிய வீரர்கள் உண்மையிலேயே கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

அதை களத்திலும் காண்பிக்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலை வரும்போது, பயந்து விடாமல் தங்களது திட்டமிடலை கனகச்சிதமாக செயல்படுத்த வேண்டும். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.

பேட்ஸ்மேன்கள் சில அற்பத்தனமான தவறுகளை செய்து விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். இந்தியா போன்ற சிறந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது, இத்தகைய தவறுகளை செய்ய அனுமதிக்கக்கூடாது.

Editor:

This website uses cookies.