பேட்டிங் ஸ்டைலை மாத்தனுமா..?,வாய்பில்ல ராஜா; திட்டவட்டமாக கூறிய ரிஷப் பண்ட் !!

புதிதாக அனைத்தையும் கற்றுக் கொள்வேன் ஆனால் என்னுடைய அதிரடியான ஆட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியையே டி20 போட்டிபோல அதிரடியாக விளையாடி, அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்ற இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக திகழ்கிறார்.

ரிஷப் பண்ட் தற்பொழுது கேப்டன் ஆகிவிட்டதால் அதே அதிரடியான ஆட்டத்தை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமான ஒரு வீரர் அதிரடியாக விளையாடுவது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட மாட்டாது, ஆனால் ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு எப்பொழுதுமே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது. நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் சற்று பொறுமையாகவும் ஆட வேண்டிய கடமை கேப்டனுக்கு உள்ளது என்று சிலர் ரிஷப் பண்டிர்க்கு அறிவுரை கொடுத்துள்ளனர்

ஆனால் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரிஷப் பண்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதன் முதலில் நான் டெல்லி அணியில் சேர்ந்த பொழுது நடைபெற்ற மீட்டிங்கில் டெல்லி அணியின் ஓனர் மட்டும் டெல்லி அணியில் இருப்பவர்கள் என்னிடம் பேசியதை வைத்து நான் தன்னம்பிக்கை பெற்றேன், கடந்த 4 ஆண்டுகளில் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது ஆனால் எப்பொழுதும் நான் முதலில் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன், மேலும் என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்வேன் டெல்லி அணியில் சமி, பேட் கம்மின்ஸ்,ரபாடா, குல்டர் நைல் போன்ற உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர், அவர்கள் அணியில் இருந்த போது, இவர்களுடன் இணைந்து விளையாடுவதால் எப்படிப்பட்ட நிலையிலும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற தன்னம்பிக்கை பெற்றேன், மேற்கூறிய அனைத்தும் தான் தற்பொழுது நான் இந்த இடத்தில் இருப்பதற்கான காரணம்,நான் அனைத்தையும் கற்றுக்கொள்வேன் ஆனால் என்னுடைய பேட்டிங் ஸ்டைலை ஒருபோதும் மாற்றமாட்டேன் என்று ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

மேலும் பேசிய ரிஷப் பண்ட் சுற்றியுள்ளவர்கள் கூறுவதெல்லாம் என்னுடைய காதில் போட்டுக் கொள்வது கிடையாது ஆனால் நாம் சரியாகத்தான் செயல்படுகிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்றால் பல தடைகள் வந்தே தீரும், அது கொஞ்சம் கடினம் தான் என்று ரிஷப் பண்ட் பேசியிருந்தது குற்பிடதக்கது.

Mohamed:

This website uses cookies.