உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து தனது யூட்யூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா விரிவாகப் பேசியுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தயாரிப்பில் அனைத்து அணிகளும் விளையாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான முன்னேற்பாடில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும், இந்தியா,பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய விட்டது இதன் காரணமாக எதிர்வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் அதேபோன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக நிச்சயம் எளிதாக வெற்றி பெற்று விடும், ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதற்கான வாய்ப்பு உறுதியாகிவிடும்.
மற்ற அணிகள் குறித்து தற்போது பார்ப்போம், நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடையாது, ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு தொடர்கள் தான் தனது சொந்த மைதானத்தில் உள்ளது, பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தொடர் சமன் ஆகிவிட்டதால் நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு கிடையாது, அதேபோன்று இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னேறுவதற்கான வாய்ப்பும் இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு தகுதியான அணிகள் என்று பார்த்தோமென்றால் பாகிஸ்தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தான் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.