ஒவ்வொரு கேப்டனும் தனித்துவம் வாய்ந்தவர்கள், யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணிக்கு மூன்று விதமான தொடரிலும் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா இந்திய அணியை தான் கேப்டன் பொறுப்பேற்றதில் இருந்து மிக சிறந்த முறையில் வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை டைட்டில் பட்டதை வெல்ல வைத்து எந்த ஒரு கேப்டனும் செய்ய முடியாத மிகப் பெரும் சாதனையை படைத்தவர்.
தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் ரோகித் சர்மா ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என இரண்டு மிக முக்கிய தொடர்களை எதிர்நோக்கி விளையாட காத்துள்ளார்.
சாதாரண தொடர்களில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் எவ்வாறு அணியை வழி நடத்துவார் என்ற கேள்வி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய வல்லுனர்கள் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐயின் பிரசிடெண்ட்மான சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி பேசியதாவது, “ரோஹித் சர்மா தான் அணுகும் விஷயங்களில் அமைதியாகவும் மிக கவனத்துடனும் எதிர்கொள்கிறார். இவர் யாரை போலவும் கிடையாது, கடந்த சில வருடங்களில் இந்திய அணிக்கு அருமையான கேப்டன்கள் கிடைத்துள்ளனர். தோனி இந்திய அணிக்கு அருமையான முறையில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். அவர் இந்திய அணிக்காகவும் சரி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சரி.. மிக சிறந்த முறையில் தலைமையேற்று அணியை வழிநடத்தியுள்ளார். அதேபோன்று விராட் கோலி மிகச்சிறந்த முறையில் இந்திய அணியை தனித்துவமான முறையில் வழிநடத்தியுள்ளார், ஒவ்வொரு கேப்டனும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஆனால் முடிவு என்னவென்றால் அவர்கள் எவ்வளவு வெற்றிகளை பெற்றுள்ளார்கள் என்பது மட்டுமே,நான் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை,ஒவ்வொருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது என்றும் கங்குலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.