என்ன வேணா சொல்லுங்க… அவரு அவ்வளவு பெரிய கேப்டன் கிடையாது; விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !!

LEEDS, ENGLAND - JULY 17: England captain Eoin Morgan bats during the 3rd Royal London One-Day International match between England and India at Headingley on July 17, 2018 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)

தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஒரு மிகச்சிறந்த கேப்டன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த இயின் மோர்கன் என்று பலரும் கூறி நாம் சமீப காலங்களில் கேட்டு இருந்திருப்போம். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் மோர்கன் டெக்னிகல் முறையில் சிறந்த கேப்டன் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை சமீப சில வருடங்களில் சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை வாங்கி தந்துள்ளார். குறிப்பாக 2019 நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கி முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்நிலையில் சல்மான் பட் இவ்வாறு கூறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வெகு வாரியாக ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டெக்னிகலாக மோர்கன் சிறந்த கேப்டன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

இது குறித்து பேசியுள்ளார் சல்மான் பட் இந்திய அணியை தலைமை தாங்கிய பொழுது மகேந்திர சிங் தோனி மிகச் சிறப்பாக செயல்பட்டார். எப்பொழுது எந்த வேளையில் எந்த வீரர்களை விளையாட வைப்பது என்பது குறித்து அவர் தெளிவாக இருப்பார். எதிரணி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் எந்த வீரரை பந்துவீச வைக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதேபோல ஐபிஎல் தொடர்களில் ரோகித் சர்மா மகேந்திர சிங் தோனி போல மிக சிறப்பாக தனது அணியை தலைமை தாங்குவார்.

ஆனால் இங்கிலாந்து அணியை தலைமை தாங்கி வரும் மோர்கன், டெக்னிக்கலாக ஒரு சில விஷயங்களில் இவர்கள் இருவரைப் போல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இவரது அணி கம்மியான ரன்கள் குவிக்கும் வேலையில், எதிரணியை கட்டுப்படுத்தி தோற்கடிக்கும் திறமை மோர்கன் இடம் இல்லை என்று சொல்வேன். ஒரு சில விஷயங்களில் அவர் தெளிவாக இல்லாதது போல் எனக்கு தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டுப்லஸ்ஸிஸ் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் அவரால் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை சரியாக தலைமை தாங்க முடியாத காரணத்தினால் அந்த அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி 300 350 ரன்கள் குவித்தாலும், எதிரணியை கம்மி ரன்கள் வைத்து கட்டு படுத்தும் திறமை அவரிடம் இல்லை என்று இறுதியாக சல்மான் பட் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.