தன்னை எப்படி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வைத்தது என்பது குறித்து மனம் திறந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
மும்பை இந்தியன்ஸ் அணி என்ற உடன் கிரிக்கெட் விவரம் தெரிந்த அனைவர் மத்தியிலும் தோன்றும் இரண்டு வீரர்களென்றால் அது ரோகித் சர்மா மற்றும் பும்ராதான், அப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் பேரையும் புகழையும் பெற்ற இந்த இரண்டு வீரர்களும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் புகழ்பெற்ற வீரர்களாக வலம் வருகின்றனர். இவர்களுடன் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி பல முறை வெற்றி பெற்றுள்ளது.
இதனால் மற்ற வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விட்டுக் கொடுத்தாலும், ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இரண்டு வீரர்களையும், எப்பொழுதுமே விட்டுக் கொடுக்காது என்றே கூறலாம் , அந்த அளவிற்கு இந்த இரண்டு வீரர்களின் திறமை மேல் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.
இந்தநிலையில் சமீபமாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வைத்திருக்கும் யூடியூப் சேனலுக்கு ஜாலியாக பேட்டியளித்த பும்ரா,தன்னை எப்படி மும்பை இந்தியன்ஸ் அணி, தனது அணியில் இனைத்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர்,2013ஆம் ஆண்டு பெங்களூருவில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, நாங்கள் பயிற்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்றோம் ,அப்பொழுது மைதானம் பச்சைப் பசேலென்று இருந்தது, மேலும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது, அப்பொழுது நான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பலருக்கும் வந்து வீசினேன் என்னுடைய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் (அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார்) பேட்டிங் செய்தார். அவரை நான் எனது பந்துவீச்சின் மூலம் இரண்டு அல்லது மூன்று முறை அவுட் செய்திருப்பேன், இதை கவனித்த மும்பை இந்தியன்ஸ் அணி என்னிடம் ஏதோ தனித்திறமை உள்ளது என்று கருதி என்னை அணியில் இணைத்துக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்.