நான் ஒன்னுமே செய்யல… வெற்றிக்கு காரணம் இந்த ஒரு பையன் தான்; ஆட்டநாயகன் விருதை சக வீரருக்கு அர்பணித்த டூபிளசிஸ் !!

நான் ஒன்னுமே செய்யல… வெற்றிக்கு காரணம் இந்த ஒரு பையன் தான்; ஆட்டநாயகன் விருதை சக வீரருக்கு அர்பணித்த டூபிளசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்ற பெங்களூர் அணி கெத்தாக ப்ளே ஆஃப் சுற்றிலும் கால் பதித்துள்ளது.

ப்ளே ஆஃப் தொடருக்கான நான்காவது டீமை உறுதி செய்யும் மிக முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள்  குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் டூபிளசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜத் படித்தர் 41 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிவம் துபே உள்ளிட்ட சில வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் போட்டி கைவிட்டு செல்வதை உணர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு தேவையான 201 ரன்கள் எடுப்பதில் சென்னை அணி முழு கவனத்தை செலுத்தினாலும், பெங்களூர் வீரர்களின் தரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்காலும் யஸ் தயால் கடைசி ஓவரை கச்சிதமாக வீசியதாலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததோடு, 9 ரன்கள் வித்தியாசத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தவறவிட்டது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த மிரட்டல் வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை போட்டியின் கடைசி ஓவரை வீசிய யஸ் தயாலிற்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “இந்த இரவு எங்களுக்கு மிக சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த போட்டியின் முடிவையும், ரசிகர்களின் ஆதரவையும் என்னால் நம்பவே முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது மிக மிக கடினம். மழைக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறுபட்டதால் இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் எடுப்பது எல்லாம் சாத்தியமே இல்லை 140 – 150 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்றே கருதினோம். ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். அதே போன்று கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தபோது, தோனி களத்தில் இருந்ததால் அவரால் இதை அசால்டாக எடுத்து கொடுக்க முடியும், இது அவருக்கு புதிது அல்ல என்றே நினைத்தேன். அதே போன்று  பந்து ஈரமாக இருந்ததாலும், அதை வைத்து கொண்டு தோனி போன்ற ஒருவரை கட்டுப்படுத்துவது சாதரண விசயம் இல்லை என்றும் கருதினேன், ஆனால் யஸ் தயால் அனைத்தையும் மாற்றிவிட்டார். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆட்டநாயகன் விருதை யஸ் தயாலுக்கு கொடுக்க விரும்புகிறேன், யஸ் தயால் கடைசி ஓவரை வீசிய விதம் அபாரமானது. கடைசி ஓவரில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் எதை பற்றியும் கவலைப்படமால் உன் மீதும், உனது திறமை மீதும் மட்டும் வைத்து நம்பிக்கை வைத்து பந்துவீசு என்று மட்டுமே நான்  யஸ் தயாலிடம் கூறினேன், அவர் தனது வேலையை மிக சிறப்பாக செய்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.