உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்து வீச முடியாமல் போனதால் போனதால் இந்திய அணி பவுலிங் ஆப்சன் இல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் மிக மோசமாக விளையாடி அரை இறுதிசுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இத்துடன் ஹர்திக் பாண்டியாவின் சகாப்தம் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்த்து நிலையில் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் ரீ-என்றி கொடுத்து இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஹர்த்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இல்லையென்றால் இந்திய அணி நிலையாக விளையாடுவது கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பெரும்பாலான தெரிவித்துவந்த நிலையில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் மீது வேலைப்பளுவை குறைத்து முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாட வைப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது ஆசிய கோப்பையில் கவனம் செலுத்தி வரும் இந்திய அணி இன்னும் சில மாதங்களில் உலகக் கோப்பை தொடர்கான போட்டியில் விளையாடவிருப்பதால் இந்திய அணி, தன் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ளதால் அவர் மீது இந்திய அணி தனி கவனம் செலுத்தி வருகிறது. ஒருவேளை பும்ரா உலகத்தை தொடரில் இடம் பெறவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் வீர கௌதம் கம்பீர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மிக முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கௌதம் கார்த்திக் தெரிவித்ததாவது, “ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும்(உடற் தகுதி அடிப்படையில்) சற்று இக்கட்டான நிலையில் இருக்கும் வீரர்கள், ஹர்திக் பாண்டியா உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நன்றாகவே தெரியும் அவர் பேட்டிங்கில் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் தற்போது அவர் 140kph வேகத்தில் பந்து வீசுகிறார். இதைத் தவிர வேறு எதை வைத்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்று முடிவு செய்ய முடியும்..? அவர் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய வீரராக திகழ்வார். அவரை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கௌதம் காம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.