தனது பார்மை பற்றி பேசிய ஷுப்மன் கில்

U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல் பட்டது. இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஷுப்மன் கில் தெறி பார்மில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஷுப்மன் கில்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த ஷுப்மன் கில் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட்டில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். இந்த உலககோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் ஷுப்மன் கில்.

India’s Shubman Gill celebrates 100 runs during the U19 semi-final cricket World Cup match between India and Pakistan at Hagley Oval in Christchurch on January 30, 2018. / AFP PHOTO / Marty MELVILLE (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

இந்த உலகக்கோப்பையை வென்று ஜூனியர் இந்திய அணி சாதனை படைத்தது. இது வரை U19 உலகக்கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றது இந்தியா. இதற்கு முன்பது 2000, 2008 மற்றும் 2012ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது.

“என்னிடம் இது தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது.முதலில் நான் வெள்ளை நிற பந்தில் விளையாடி இருந்தேன். அதன் பிறகு சிவப்பு நிற பந்தில் விளையாட தொடங்கி ரன் அடிக்க தொடங்கினேன். கடந்த 3-4 வருடமாக இந்த பார்ம் என்னிடம் தான் உள்ளது,” என ஷுப்மன் கில் தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.