இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புஜாரா மற்றும் ரஹானே இருவரும் சரியாக ஸ்கோர் செய்யவில்லை. புஜாரா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 22.17 மட்டும்தான். மறுபக்கம் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவளது டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 18.67 ஆக இருந்தது.
எனவே இவர்கள் இருவரும் நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நன்றாக பங்களிப்பாளர்களா என்றும் அதை தொடர்ந்து இங்கிலாந்து கீழாக நடக்க இருக்கின்ற இந்த டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் சரியாக விளையாடுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
புஜாரா மற்றும் அஜின்கியா ரகானேவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு
புஜாரா 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மறுபக்கம் அஜிங்கிய ரஹானே 50 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார் அவர்கள் இருவருக்கும் எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். பல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். ஒரு தொடரை மட்டும் வைத்து நாம் அவர்களை மதிப்பிடக்கூடாது.
என்னைப் பொருத்தவரையில் நிச்சயமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சரி அதனை தொடர்ந்து நடக்க இருக்கின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சரி அவர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார். அவர்கள் சாம்பியன் வீரர்கள் நிச்சயமாக அவர்களது பழைய பார்மை நமக்கு காண்பிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தில் மொத்தமாக பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 556 ரன்களை குவித்து இருக்கிறார் அவருடைய பேட்டிங் அவரேஜ் 29.26 என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் புஜாரா இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 500 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 29.41 ஆகும்.
தற்பொழுது இந்திய அணி மும்பையில் தன்னை படுத்தப்பட்டுள்ளது கூடிய விரைவில் இங்கிலாந்துக்கு அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கே சென்றதும் மீண்டும் பத்து நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்த படுவார்கள். அதன்பின்னர் வருகிற 18-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.