அவரு மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் பேட்டிங் செஞ்சிருந்தா… இந்திய அணி ஜெயிச்சிருக்க முடியாது! – வங்கதேசம் கேப்டன் பேட்டி!

“எங்களது அணியில் முக்கியமான வீரர் இல்லை மற்றும் பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதல் நேரம் பேட்டிங் செய்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும்.” என்று போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சான்டோ.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேசம் அணி முதலில் இறங்கி மிகச் சிறப்பான துவக்கம் பெற்றது. தன்ஷித் ஹாசன் 51 ரன்கள், லிட்டன் தாஸ் 66 ரன்கள் அடித்தனர். பின்னர் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்கள், மஹ்மதுல்லா 46 ரன்கள் அடிக்க, இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் அடித்தது வங்கதேசம் அணி.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 48 ரன்கள், சுப்மன் கில் 53 ரன்கள் அடித்து அபாரமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களுக்கு அவுட்டானார்.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் போட்டியை ஃபினிஷ் செய்து கொடுத்தனர். இதில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். கே எல் ராகுல் 34 ரன்கள் அடித்திருந்தார். 41.3 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த வங்கதேசம் அணியின் தற்காலிக கேப்டன் நஜ்முல் சான்டோ பேசியதாவது:

“இந்திய அணி எப்போதும் சிறந்த அணியாகவே இருந்திருக்கிறது. போட்டியை வெற்றி பெறக்கூடிய அணியாகவும் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை இன்று காட்டியுள்ளார்கள். இன்றைய போட்டியில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்த தவறிலிருந்து சரி செய்து கொண்டு மீண்டு வருவோம். அணியின் முக்கிய வீரர் சகிப் அல்ஹாசன் காயத்தில் இருக்கிறார். அடுத்த போட்டிகளுக்குள் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

துவக்க வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அதேபோல் எங்களது பவுலர்களும் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்காமல் போட்டியை ஃபினிஷ் செய்ய தவறிவிட்டோம்.

துவக்க வீரர் லிட்டன் தாஸ் நல்ல பார்மில் இருக்கிறார். இன்னும் கூடுதல் நேரம் அவர் களத்தில் இருந்திருந்தால் இந்த போட்டி எங்களது பக்கமும் திரும்பியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களிடம் எந்த தவறும் இல்லை. பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்து விளையாட வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.