தேவை இல்லாத வேலை… இப்படியே நடந்தா பழைய ஜடேஜாவை பார்க்க முடியாது; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர் !!

இந்திய அணி ஜடேஜா விஷயத்தில் ஒருபோதும் இந்த தவறை செய்யக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக நீண்டநாள் ஓய்வில் இருந்த ஜடேஜா நீண்ட இடைவெளிக்குப் பின் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

நீண்ட நாட்களுக்குப் பின் விளையாடினாலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தில் எப்பொழுதும் போல் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 175* ரங்களும் பந்துவீச்சில் 9 விக்கெட்களும் எடுத்து அசத்தியுள்ளார்.

ஜடேஜாவின் அபாரமான பேட்டிங்கின் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் பேட்டிங்கில் அசத்தும் ஜடேஜாவை, லோயர் மிடில் ஆர்டரில் விளையாட வைக்காமல், டாப் ஆர்டரில் களமிறக்கலாம் என்று பேசி வருகின்றனர். ஆனால் அப்படி செய்தால் ஜடேஜாவின் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்படும் என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஜடேஜாவிற்கு மிகவும் நெருக்கடி கொடுத்து அவரை பேட்டிங்கில் முன்னதாகவே விளையாட வைத்தால், ஜடேஜாவின் பந்துவீச்சிற்கு அது ஆபத்தாக மாறிவிடும், ஜடேஜா இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து, அவரை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி தான் பயன்படுத்தவேண்டும்,தேவையில்லாத விஷயங்கள் செய்து அவருடைய திறமையை மங்கவைத்து விடக்கூடாது, என்னதான் அஸ்வின் மற்றும் ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் இவர்கள் இருவருமே பந்துவீச்சு ஆல்ரவுண்டர் (Bowling-alrounder) என்பதை மறந்து விடக்கூடாது.

முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதே தவறை செய்து விமர்சனத்திற்கு உள்ளானது, ஜடேஜாவை ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்து ரஹானேவை ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்தது ஆனால் இந்த திட்டம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது, இந்திய அணி மீண்டும் இதே தவறை செய்யக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.