பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர் இம்ரான் நாசிர் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்க போகிறார். 36 வயதான பாகிஸ்தான் வீரர் இம்ரான் நாசிர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆவலாக இருக்கிறது என ஒரு வீடீயோவில் தெரிவித்திருந்தார்.
“ஹலோ காய்ஸ், நான் தான் இம்ரான் நாசிர். முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் ஜாலியாக ஒரு மேட்ச் விளையாட பிப்ரவரி 4 அன்று நான் முல்தானுக்கு வருகிறேன்,” என இம்ரான் நாசிர் ஒரு வீடீயோவில் தெரிவித்திருந்தார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார் இம்ரான் நாசிர். பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்கவீரர் நாசிர் கடைசியாக பிப்ரவரி 2014ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு காயங்கள் தொந்தரவு கொடுக்க தொடங்கியது.
பிப்ரவரி நான்கன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக நட்பு போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் விளையாட இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாகிஸ்தான் அணி தேர்வாளர் இன்சமாம் உல் அக்கின் சொந்த ஊரும் முல்தான் தான்.
அவர் கடைசியாக அக்டோபர் 6, 2014 ஆம் தேதி ஆசியா XI மற்றும் உலக XI அணிக்காகவும் டோஹாவில் விளையாடினார். மேலும், அவர் உடல்நலத்துடன் இருக்க தொடர்ந்து கடினமாக உழைத்தார். டி20 போட்டிகளின் போது அவரிடம் இருந்து விதவிதமான ஷாட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.