இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் அனுபவ வீரர் புஜாரா குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது
இதில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. அத்தகைய மகத்தான சாதனையை இந்திய அணி நிகழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி (ஜனவரி ) இன்று மதியம் ஒன்று முப்பது மணி அளவில் வண்டரர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியிலும் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் இந்திய அணி குறித்தும் தென்ஆப்பிரிக்க அணி குறித்த தங்களது கணிப்புகளை ஒவ்வொரு வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் அனுபவ வீரர் புஜாரா குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்தை பேசியுள்ளார்.
2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அறிமுகமான இந்திய அணியின் அனுபவ துடுப்பாட்டக்காரர் புஜாரா, இந்திய அணிக்காக கடந்த பத்து வருடங்களாக தனது மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். சமீப காலமாக தனது சிறந்த பார்மை வெளிப்படுத்துவதில் திணறி வரும் புஜாரா குறித்து கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதனை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது, “அக்கரை என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன், புஜாரா தன்னுடைய சிறப்பான பங்களிப்பை தான் கொடுத்து வருகிறார், அவர் நிச்சயம் அதிக ரன்களை அடிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, கடந்த பத்து வருடங்களில் இந்திய அணிக்காக அவர் பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் கடந்த காலங்களில் பல சாதனைகளை,பல சிறந்த ஆட்டங்களை மற்றும் அதிக ரன்களை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார், அதை மீண்டும் செய்வதற்கு புஜாரா தயாராக உள்ளார்.
தற்பொழுது அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, அவருடைய பேட்டிங் பொசிஷன் மிகவும் கடுமையானது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மைதானத்தில் நிலைத்து விட்டால் அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவிப்பார்கள், அப்படி நடந்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும், நிச்சயம் புஜாரா வருகிற போட்டியில் மிக சிறப்பாக விளையாடுவார் அவரை பற்றி எந்த கவலையும் வேண்டாம் என்று ராகுல் டிராவிட் பேசியிருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா 0,16 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.