வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் மிரட்ட காத்திருக்கும் மழை !!

வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் மிரட்ட காத்திருக்கும் மழை 

இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வரலாற்றை வல்லரசு இந்திய அணியுடன் துவங்கவுள்ளது

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கான் அணி அப்படியே முழுமையாக கைப்பற்றியது

இதையடுத்து ஆப்கான் அணி அறிமுகமாகும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடக்கும் பெங்களூரு மைதானத்தில் மழை பெய்து ஆடுகளம் மூடப்பட்டுள்ளது.

தவிர, போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் பயணத்தை துவங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

இதையடுத்து ஆப்கான் அணி அறிமுகமாகும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடக்கும் பெங்களூரு மைதானத்தில் மழை பெய்து ஆடுகளம் மூடப்பட்டுள்ளது.

தவிர, போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் பயணத்தை துவங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

 

 

Mohamed:

This website uses cookies.