காயம் காரணமாக வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர்,அவருக்கு பதில் களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் ..
நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் தரமான ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்று இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தை நிரப்புவதற்கு தகுதியான மூன்று டெஸ்ட் வீரர்கள் பற்றியும் தெரிவித்துள்ளனர்.
கே. எஸ்.பரத்
ரெகுலராக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஸ் பரத் கீப்பிங்கில் அசத்தினாலும் பேட்டிங்கில் இவர் சுமாராகத்தான் செயல்படுகிறார்.
ஆனால் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒரு வீரர் இல்லாத நிலையில் மிடில் ஆர்டர்களில் இவரை பயன்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதால் இவர் இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகப்படுத்தலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர்.