பிளானை மாற்றிய ரோகித் சர்மா.. இந்திய அணியில் முக்கியமான சேஞ்ச்.. முதலில் பவுலிங் செய்கிறது இந்தியா..!

நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இருவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இருநாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட 75 வருடங்களாக அரசியல் ரீதியான ட்புறவு நீடிப்பதை சிறப்பிக்கும் விதமாகவும் இவர்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டாஸ் போடுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த முடிவு பின்வாங்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா டாஸ் வீசினார். போட்டியில் டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித், “மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கிறது. பிட்ச்சில் ஆங்காங்கே புற்கள் தென்படுகிறது. ஆகையால் பேட்டிங் செய்ய முடிவு செய்கிறேன்.” என்று அறிவித்தார்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. ஆனால் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. முகமது சிராஜ் வெளியில் அமர்த்தப்பட்டு முகமது சமி உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி:

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஜானே, ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிச்சல் ஸ்டார்க், டாட் மர்பி, நேத்தன் லயன், மெட் குன்னமென்

இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணி:

ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், கே எஸ் பரத், முகமத் சமி, உமேஷ் யாதவ்.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தகுதி பெறலாம், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பெறலாம்.

Mohamed:

This website uses cookies.