இதை ஏன் செய்யவில்லை…? இந்திய அணியை கேள்வி கேட்கும் சேன் வார்னே !!

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

பந்துவீசத் துவங்கிய நான்காம் நாள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழந்திருந்தது. ஐந்தாவது நாளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல, நியூசிலாந்து அணி 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறி வந்தது. ஐந்தாம் நாள் முடிவடைய இன்னும் 52 பந்துகள் இருந்த நிலையில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜாஸ் படேல் மற்றும் ரவீந்தர ரச்சின் இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் விட்டுக்கொடுக்காமல் ஆட்டத்தை டிராவில் முடிப்பதற்கு பெரிதும் உதவினர்.

அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் பட்டேல் மூவரும் கடுமையாக முயற்சித்தும் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது. இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய அஸ்வின் கூறுகையில்,

“சரியான இடத்தை குறிவைத்து பந்துவீசி வந்தோம். துரதிஸ்டவசமாக கடைசியில் விக்கெட் விழாமல் போனது. போதிய வெளிச்சம் இன்மை எப்போதும் அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது. போட்டி முடிவதற்கு இன்னும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இருக்கிறது என எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் வெளிச்சம் சாதகமாக அமையவில்லை. ஐந்தாவது நாளில் மட்டுமல்ல; அதற்கு முன்னதாக இருந்த நான்கு நாட்களிலும் இதே நிலையே இருந்தது.

ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், அஜாஸ் பட்டேல் நல்ல மனநிலையுடன் விளையாடினார். ரச்சின் தனது முதல் போட்டியில் இத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடியது சிறந்த அனுபவமாக இருந்திருக்கும். வெற்றி பெறவில்லை ஆனால், பார்வையாளர்களுக்கு இது சிறந்த போட்டியாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.” என்று பேசினார்.

இப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இவர் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி இந்த சாதனையை படைத்திருக்கிறார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் 419 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

Mohamed:

This website uses cookies.