அடுத்து பாத்துக்கலாம்… இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லாக மூன்று வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 3ம் தேதி துவங்க உள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் ஐந்தாம் நாளில் 9 விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்திருந்தபோது, அன்றைய நாள் முடிவடைய இன்னும் 52 பந்துகள் மீதம் இருந்தன. அதற்குள் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். அதனை செய்யத் தவறியதால், ஆட்டம் டிராவில் முடிந்து, தற்போது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரையும் வெல்லும் என்பதால், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தநிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லாத மூன்று முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

புஜாரா;

முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால் புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. விராட் கோலியின் இடத்தில் களமிறக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடிவிட்டதால் அவர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை, எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.