இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்கள் அவுட் ஆனது. போட்டி சுருக்கத்தை கீழே காண்போம்.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணைக்கு சஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் துவக்க வீரர்களா களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்தது. இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்து சஃபிக்(20) விக்கெட்டை தூக்கினார் முகமது சிராஜ்.
களத்தில் நிலைகொண்டு சிறப்பாக ஆடி வந்த இமாம் உல் ஹக்(36) விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் அரைசதத்தை அடித்தார் கேப்டன் பாபர் அசாம். 50 ரன்கள் அடித்த கையோடு முகமது சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
அடுத்து உள்ளே வந்த சவுத் சக்கில்(6) மற்றும் இஃப்திகர் அகமது(4) இருவரும் குல்தீப் யாதவ் வீசிய இன்னிங்ஸ்-இன் 33 வது ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பாகிஸ்தான் அணியை சரிவை நோக்கி எடுத்துச் சென்றனர். இந்த இடத்தில் இந்திய அணி கை ஓங்கியது.
கடைசியில் வந்து கை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்கள் முகமது நவாஸ் மற்றும் சதாப்கான் இருவரும் ஒற்றை இலக்கண்களுக்கு வெளியேறியதால் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஹசன் அலி தனது பங்கிற்கு 12 ரன்கள் அடித்தார்.
ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, 42.5 ஓவர்களில் 191 ரன்கள் ஆல் அவுட் ஆனது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என அனைவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் அதேநேரம் பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதால், இந்திய அணி இந்த 192 ரன்கள் இலக்கை கடந்து விடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.