சம்பவம் உறுதி… இந்திய அணியை துவம்சம் செய்து எல்லா வரலாறையும் மாத்தி எழுதுவோம்; பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை !!

சம்பவம் உறுதி… இந்திய அணியை துவம்சம் செய்து எல்லா வரலாறையும் மாத்தி எழுதுவோம்; பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி மீதே அதிக அழுத்தம் இருக்கும் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி போட்டி 14ம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான ஹசன் அலி, பாகிஸ்தானை விட இந்திய அணி மீதே அதிக அழுத்தம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹசன் அலி பேசுகையில், “இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி உலகின் மிக சிறந்த மற்றும் சவாலான போட்டியாகவே நான் பார்க்கிறேன். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காகவே காத்துள்ளது. நாங்கள் இந்திய அணியுடனான போட்டிக்காக மிகுந்த ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் காத்துள்ளோம். கிட்டத்தட்ட 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கும் இந்திய அணியுடனான போட்டி எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது. இந்திய அணியுடனான போட்டியில் வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடுவோம். 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை என்ற வரலாறை இந்த தொடரில் மாற்றி எழுதுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை விட இந்திய அணி மீதே அதிக அழுத்தம் இருக்கும். சொந்த மண்ணில், பல்லாயிரக்கணக்கான தங்களது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் இந்திய வீரர்கள் மீது நிச்சயம் அதிக அழுத்தம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.