எதிரியாக இருந்தாலும் பாபர் அசாம் விளையாட்டை ரசித்து பார்ப்பேன் ; மனம் திறந்த விராட் கோலி !!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்,கிரிக்கெட் மீது அதிக பாசம் வைத்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் சூழ்நிலையாலும் கடந்த கால மோசமான வரலாற்றினாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமல் வெவ்வேறு துருவம் போல் மோதிக் கொண்டு வருகிறது.

இது எல்லையில் மட்டும் நடக்காமல் இருநாட்டிலும் அதிக விரும்பும் கிரிக்கெட் போட்டியிலும் நடைபெற்று வருகிறது. என்னதான் கிரிக்கெட் போட்டி ஒரு விளையாட்டாக இருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெறும் போட்டி கிட்டத்தட்ட இரு நாடுகளும் தங்களுடைய பெருமைக்காக விளையாடுவது போல் ஒட்டுமொத்த உலகிற்கும் காட்சி அளிக்கிறது.

பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொள்ளாதிருக்கும் நிலையில், ஆசிய கோப்பை மற்றும் ஐசிசியால் நடத்தப்படும் உலகக் கோப்பை ஆகிய இரண்டு தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கிறது.

ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலகின் பார்வையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டி எதிரும் புதிருமாக இருந்தாலும், இரு நாட்டிர்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்கு மத்தியில் நட்புறவாக தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக திகழ்கிறது.

 

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சகீன் அஃப்ரிடி காயம் காரணமாக விளையாடவில்லை என்ற தகவல் அறிந்த உடன் இந்திய அணியின் வீரர்கள் நலம் விசாரித்து சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்த தன்னுடைய கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து விராட் கோலி பேசுகையில், “2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தான் நான் முதன் முதலில் பாபர் அசாமை சந்தித்தேன், பாபர் அசாமும் இமாத் வசிமும் ஒன்றாக இருந்தனர், எனக்கு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதில் இருந்தே இமாதை தெரியும், இமாத் வசீம் என்னிடம் வந்து பாபர் அசாம் உங்களிடம் பேசுவதற்கு ஆசைப்படுகிறார் என்று கூறினார். இதனால் நாங்கள் அங்கு அமர்ந்து விளையாட்டை குறித்து பேசினோம், அப்பொழுது பாபர் அசாம் விளையாட்டின் மீது அதிக மரியாதையும் மதிப்பும் வைத்திருந்ததை என்னால் காண முடிந்தது,தற்போது அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக மூன்று தொடரிலும் சிறப்பாக செயல்படுகிறார். அப்படி இருந்தும் இது அவரிடம் இருந்து மாறவே இல்லை. அவருடைய விளையாட்டை நான் ரசித்துப் பார்ப்பேன் அவர் என்னிடம் முகம் சுளிக்காமல் எந்த ஒரு ஆட்டிடியூடும் காட்டாமல் பழகுகிறார். இவருடைய கிரிக்கெட் அடிப்படை மிகவும் பலமாக உள்ளது இதனால் இவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது, இவரை போன்ற குணம் உள்ள ஒரு நல்ல மனிதர் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று பாபர் அசாம் குறித்து விராட் கோலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது .

Mohamed:

This website uses cookies.