தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (2-10-22) நடைபெற உள்ளது.
கவுஹாத்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததால் பும்ராஹ்விற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட முகமது சிராஜிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.
பேட்ஸ்மேன்களாக கடந்த போட்டியை போல இந்த போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
ஆல் ரவுண்டர்களாக அக்ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் இடம்பெறுவார்கள், அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஹர்சல் பட்டேல், தீபக் சாஹர், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், ஹர்சல் பட்டேல், தீபக் சாஹர், அர்ஸ்தீப் சிங்.