இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் பேட்டிங் குறித்து தனது கருத்தை பேசுயுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் தேதி துவங்க உள்ளது.
குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முறையற்ற பேட்டிங் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இரு அணிகளுக்குமே மூன்றாவது டெஸ்ட் போட்டி மிக முக்கியமானது என்பதால், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்கள் மிகவும் சவாலாக இருந்தது, ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் ஆனால் அவர்கள் தங்களது பார்ட்னர்ஷிப்பில் இன்னும் சில ரன்களை குவித்து இருக்கலாம், குறிப்பாக நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்தை எதிர் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது, இருந்தபோதும் முதல் இன்னிங்சில் இந்திய அணி 60-70 ரன்கள் அடித்து இருக்கலாம்,ஆனால் அதை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டார்கள்.
தற்பொழுது இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது வருகிற போட்டியில் சிறந்த துவக்க மட்டும் கொடுக்காமல் அதை சதமாகும் சில இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மாற்றுவார்கள் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.