தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் தேதி துவங்க உள்ளது.
ஒருதலைப்பட்சமாக முடியும் என்று எதிர்பார்க்க போட்டி மிகவும் சுவாரசியமாக நடைபெற்று கொண்டிருப்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி மட்டுமில்லாமல் அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு அதிகமான ரன்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கும் மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
கே எல் ராகுல்
காயம் காரணமாக ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வில்லை என்பதால் இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக செயல்படும் கேஎல் ராகுல் பேட்டிங்கில் தற்பொழுது மரணம் பார்மில் உள்ளார்.
மூன்று விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக பேட்டிங் செய்யும் கேஎல் ராகுல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக அதிகமான ரன்களை குவித்து சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.