சஞ்சு சாம்சன், சிவம் துபே இல்லை… ரிங்கு சிங், ரியான் பிராக்கிற்கு இடம்; முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !!

சஞ்சு சாம்சன், சிவம் துபே இல்லை… ரிங்கு சிங், ரியான் பிராக்கிற்கு இடம்; முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

இந்திய அணியுடனான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கையின் பல்லேகிலே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் ஆடும் லெவனில் சிவம் துபே, சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அக்‌ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், ரியான் பிராக், ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்; 

சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரியான் பிராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ்.

முதல் டி.20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன்; 

பதும் நிஷான்கா, குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா, மெண்டிஸ், சாரி அஸலன்கா, தசுன் ஷானகா, வானிது ஹசரங்கா, மதீஷா பதிரானா, மகேஷ் தீக்‌ஷன்னா, அசிதா பெர்னாண்டோ, தில்சன் மடுசானகா.

Mohamed:

This website uses cookies.