இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை வெறும் மூன்றே நாட்களில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. அக்ஷர் பட்டேல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் அவருக்கு அணியில் இடம் கொடுத்துள்ள இந்திய அணி, ஜெயந்த் யாதவை ஆடும் லெவனில் இருந்து நீக்கியுள்ளது. இது தவிர இந்திய அணியில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. பதும் நிஷான்கா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை, அவர்களுக்கு பதிலாக குஷால் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;
மாயன்க் அகர்வால், ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி;
திமுத் கருணாரத்னே, லஹிரு திரிமன்னே, குஷால் மெண்டிஸ், ஆன்கிலோ மேத்யூஸ், தனன்ஞயா டி சில்வா, சாரித் அஸ்லன்கா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்கா லக்மல், லசீத் எம்புல்டேனியா, விஸ்வா ஃபெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரமே.