இந்தியா வந்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது, இதில் 4ஆம் தேதி மோஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை (மார்ச் -12) நடைபெற உள்ளது, இந்த போட்டியில் 3 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
மயங்க் அகர்வால்
உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் என்ற பெயர்பெற்ற மயங்க் அகர்வால், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 49 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல், இளம் வீரர் சுப்மன் கில் விளையாட வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.