இத மட்டும் சரியா செய்யுங்க… வாய்ப்பு உங்கள தேடி வரும்; இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரோஹித் சர்மா !!

இத மட்டும் சரியா செய்யுங்க... வாய்ப்பு உங்கள தேடி வரும்; இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரோஹித் சர்மா !! 4இத மட்டும் சரியா செய்யுங்க... வாய்ப்பு உங்கள தேடி வரும்; இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரோஹித் சர்மா !! 4

எதைப் பற்றியும் சிந்திக்காமல் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படுங்கள் இந்திய அணிக்கான வாய்ப்பு தானாக தேடி வரும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி 24ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இத மட்டும் சரியா செய்யுங்க... வாய்ப்பு உங்கள தேடி வரும்; இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரோஹித் சர்மா !! 1இத மட்டும் சரியா செய்யுங்க... வாய்ப்பு உங்கள தேடி வரும்; இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரோஹித் சர்மா !! 1


இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலங்கை அணியால் முடியாது என்றாலும், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி இந்த தொடரை எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இலங்கை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட பல இளம் வீரர்கள் இடம் பெறவில்லை, இதனால் பல இளம் வீரர்களும் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இளம் வீரர்களை உற்சாகமூட்டும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “தற்பொழுது என்னால் சொல்ல முடிந்ததெல்லாம்,கிடைத்திருக்கும் வாய்ப்பில் நன்றாக செயல்படுங்கள், அப்படி செயல்பட்டால் ஹனுமா விஹாரி, ஸ்ரேயா ஐயர், சுப்மன் கில் போன்ற வீரர்கள் போன்று உங்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். தற்போது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் எப்படி ரன்களை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும், நீங்கள் நன்றாக விளையாடும் பட்சத்தில் சரியான நேரத்தில் உங்களுக்கு வாய்ப்பு வந்தடையும்.இதன் காரணமாக நீங்கள் அதிக அதிகமான ரன்களை எடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறிக்கோளாக இருங்கள்.எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றெல்லாம் சோர்ந்துவிடாமல் சிறப்பாக செயல்படுங்கள் என்று ரோகித் சர்மா பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,இந்திய அணியில் ஆடும் லெவனில் ஒரு வீரரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் இந்தப் போட்டிக்கு, இந்த மைதானத்திற்கு, இந்த எதிரணியுடன் விளையாடுவதற்கு தகுதியானவரா என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் தேர்வு செய்யப்படுவார். இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். தற்பொழுது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னும் பொருட்படுத்தக் கூடிய விரைவில் மற்றும் ஒரு டெஸ்ட் தொடர் அறிவிக்கப்படும், இதில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதுபோல் ரோஹித் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:
whatsapp
line