இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது பேட்ஸ்மேனாக விராட் கோலி விளையாடினால் நன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற 2-0 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை அடுத்து நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்ன செய்ய வேண்டும் என்பதை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே போன்ற வீரர்கள் மோசமான பார்மால் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் 3 மற்றும் 4வது பேட்டிங் லைன்-அப் யாரை களமிறக்கலாம் என்ற யோசனையில் இந்திய அணி இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மூன்றாவது பேட்ஸ்மேனாக விராட் கோலியை களமிறக்கலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், விராட் கோலி மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும், ஏனென்றால் உலகில் சிறந்த பேட்ஸ்மென் என்று கருதப்பட்ட ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தார். அதேபோன்று சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மென் என்று கருதப்படும் ஜோ ரூட் நான்காவது இடத்தில் செய்கிறார், இதன் காரணமாக விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும், விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது, நியூ பாலில்(NEW BALL) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலிக்கு தெரியும் மேலும் விராட்கோலி இந்திய அணிக்காக சிறந்த துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்றும் சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.