விண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடரை வென்றுவிட்டதால் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, இதனால் ஹர்திக் பாண்டியா இந்த போட்டிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங்.
விண்டீஸ் அணியின் ஆடும் லெவன்;
சம்ராஹ் ப்ரூக்ஸ், சிம்ரன் ஹெட்மயர், நிக்கோலஸ் பூரண், டீவன் தாமஸ், ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், கீமோ பவுல், டாமினிக் ட்ராக்ஸ், ஓபட் மெக்காய், ஹைடன் வால்ஸ், ரோவ்மன் பவல்.