ரோஹித் சர்மா கிடையாது,இந்த சீனியர் வீரரிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டேன் ; மனம் திறந்த இளம் இந்திய வீரர் யாஷ் துல்..
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் விராட் கோலியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் யாஷ் துல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் 2023 ஒரு நாள் ஆசிய கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய-A அணியை இளம் வீரர் யாஷ் துல் வழிநடத்துவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
என்னதான் யாஷ் துல் சிறந்த வீரராக இருந்தாலும் அவர் இதுவரை வெறும் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி உள்ளார். இதுவரை ஒரு முறை கூட சர்வதேச இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பதால் இவருடைய தலைமையின் கீழ் இந்திய-A அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த முடிவு எதிர்கால இந்திய அணியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என பெரும்பாலானவர்கள் பாராட்டு வருகின்றனர் எதனால் இது தொடர் சம்பந்தமான கருத்துக்கள் கிரிக்கெட் வட்டத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆசிய தொடர் குறித்தான சுவாரசியமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய -A அணியின் கேப்டன் யாஷ் துல்.,எதிர்வரும் தொடர் குறித்து பேசியதோடு ,விராட் கோலி குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து யாஷ் துல் பேசுகையில்., “நான் விராட் கோலியை இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்திருப்பேன். அவர் தொலைக்காட்சியில் பார்ப்பதை விட நேரில் மிகவும் வித்தியாசமானவர் எனவே நான் அவரிடம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக அவருடைய ஆக்ரோஷம் மற்றும் அவர் பயன்படுத்தும் யுக்தி என அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும், அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ளலாம்” என்று யாஷ் துல் பேசியிருந்தார்.
மேலும் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய யாஷ் துல்., “எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போல் மிகவும் சாதாரண போட்டியாகும் எங்கள் எந்த ஒரு நெருக்கடியும் கிடையாது. நாங்கள் ஒரு அணியாக விளையாட திட்டமிட்டுள்ளோம், ரிசல்ட் குறித்து எந்த ஒரு எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்த போட்டியில் நெருக்கடி என்பது நிச்சயம் இருக்கும், ஆனால் அதை சமாளிக்கும் வழியும் இருக்கும். நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோமா அல்லது ரசித்து விளையாடுகிறோமோ என்பது எங்களுடைய கையில் தான் உள்ளது” என்று யாஷ் துல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.