இப்ப வேணா இவர மதிக்காம இருக்கலாம்… ஆனா டி.20 உலகக்கோப்பையில் இவர் இல்லாம சமாளிக்க முடியாது; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !!

எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில், ஆசிய கோப்பை மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறுவர் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு இரண்டு தொடர்களிலுமே இடம் கிடைக்கவில்லை.

காயத்திலிருந்து கே எல் ராகுல் மீண்டு வந்ததால் சுப்மன் கில் இடம் பறிபோய்விட்டது, ஆனால் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு நட்சத்திர இளம் வீரரை இப்படி விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் ஓரம் கட்டுவது சரியான முறை இல்லை என்றும், அவருக்கான அங்கீகாரத்தை நாம் கொடுக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா, இந்தத் தொடரில் வாய்ப்பு கொடிக்கவில்லை என்றாலும், 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் சுப்மன் கில்லை புறக்கணிக்க முடியாது என்று செய்தியாளர் சந்திப்பில் வாயிலாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து குப்தா தெரிவித்ததாவது, “ஒரு தொடரில் சிறப்பாக விளையாடிய பின்பு அணியிலிருந்து புறக்கணிக்கப்படுவது கடினமான ஒரு நிகழ்வாகும், ஆனால் இந்திய அணி கேஎல் ராகுலை ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இரண்டிலும் நல்ல பார்மில் வைத்திருப்பதற்காக அவரை அணியில் இணைத்துள்ளது. இது மிகக் குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடாகும், தற்போது சுப்மன் கில் 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தீப்தாஸ் குப்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.