வாசிம் ஜாபர் வெளியிட்ட ஆல்-டைம் இந்திய ஒருநாள் அணி: தனக்கு பிடித்த வீரர் இல்லாததால் கடுப்பான ஹர்பஜன் சிங்! ட்விட்டரில் வார்த்தை மோதல்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் ‘ஆல் டைம்’ வீரர்கள் பற்றிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதற்கு ஹர்பஜன் சிங் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். இவர் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் எல்லா காலகட்டத்திலும் ஒருநாள் போட்டிகளில் அசத்துபவர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது போல 11 வீரர்கள் கொண்ட பட்டியலைத் தயார் செய்து பதிவிட்டிருந்தார். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், நான்காம் இடத்தில் விராட் கோலியும், ஆறாம் இடத்தில் யுவராஜ் சிங்கும், எட்டாம் இடத்தில் ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங்கும் பதினொன்றாம் இடத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியிருந்தார். இதனைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங் “இந்தப் பட்டியலில் சேவாக் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த வாசிம் வீருவை உள்ளே கொண்டு வர இதில் நீங்கள் யாரை கைவிடூவிர்கள் என கேள்வி எழுப்பினார் . இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Sathish Kumar:

This website uses cookies.