இறுதி டி20 போட்டியில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றும் : சௌரவ் கங்குலி

நேற்றைய போட்டியில் மழை அதிகமாக பெய்துவிட்டது. அது இந்தியாவின் தோல்விகு மிகப்பெரிய காரணமாக அமைந்துவிட்டது. அடுத்த போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றும் என சௌரவ் கங்குலி கூறினார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி இந்தியாவை முதலில் விளையாட அழைத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

தொடக்கத்தில் விக்கெட் சரிந்ததால் 175 ரன் வரை தான் எதிர்பார்த்தோம். மனிஷ் பாண்டே -ரெய்னா ஜோடி சிறப்பாக ஆடியது. அதை தொடர்ந்து மனிஷ் பாண்டே- டோனி ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் மிகவும் அபாரமாக ஆடினார்கள்.

இதனால் 190 ரன் வரை பெற்றோம். 188 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். வெற்றி பெறுவதற்கான ரன்னாகவே நினைக்கிறேன்.

ஆனால் வானிலை தான் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 12-வது ஒவர் வரை நன்றாகவே இருந்தது. அதன்பிறகு மழை தூறலால் மோசமாக மாறியது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது.

தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ஆடுகள தன்மையை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார்கள். கிளாசன், டுமினி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே.

இவ்வாறு கோலி கூறினார்.

Editor:

This website uses cookies.