கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்றது. அந்த வருடம் இந்தியா மற்றும் பக்கத்து நாடான இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகக்கோப்பையை நடத்தின.
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஒரு நாடு உகக்கோப்பையை நடித்தி வென்றது முதன் முதலில் இந்தியாதான். அதன் பின்னர் 2015 ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தி நாடுகள் நடத்திய உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி வென்றது.
அப்படி இந்தியாவிற்கு வரும் வருடங்களில் கோப்பையை வெல்ல சில வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 2019 முதல் 2023வரை மொத்தம் 81 சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த காலட்டத்தில் தான் 2021ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2023ஆம் ஆண்டு 50ஓவர் உலகக்கோப்பையும் நடக்கவுள்ளது.
இதனால், இந்த இரண்டு கோப்பைகளையும் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. மேலும், 2015-19 காலகட்டத்தில் இந்திய அணி மொத்தம் 390 நாட்கள் சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடியது. ஆனால், 2019-2023 காலகட்டத்தில் 306 நாட்கள் விளையாடவுள்ளது இந்திய அணி
.
மேலும், சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியான ஆப்கானிஸ்தான் அணிக்குகாண முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிரகா இந்தியாவில் நடக்கவுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தனின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா அணி நடத்தவுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நல்ல உறவு காரணமாக, இந்தியா நடத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.