கையில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள்; காரணம் என்ன..?
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல் 3 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.
இந்த போட்டியில், நேற்று உயிரிழந்த கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராம்காந்த் அம்பேத்காருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்பு நிற பேட்ஜை அணிந்துள்ளனர்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின், சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்றார். இவர் குறித்து சச்சின் பல முறை பேசியுள்ளார். இவருக்கு மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார். 87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையின் நேற்று காலமானார்.
இரு அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்:-
இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சானே, டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.