அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (97 ரன்), ஷிகர் தவான் (74 ரன்) ஜோடி அயர்லாந்தின் பந்து வீச்சை பின்னியெடுத்து அணி 200 ரன்களை கடக்க வித்திட்டனர்.
அதன் பிறகு களம் இறங்கிய சிறிய அணியான அயர்லாந்து இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சுழற்பந்து வீச்சு கூட்டணி குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை அள்ளினர்.இந்த நிலையில் இந்தியா- அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதிலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.
1.கேரி வில்சன்,
அயர்லாந்து அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி20 கேப்டன் இவர். பேட்டிங்கில் தனது திறமையை காட்ட இந்த போட்டியில் முயற்சி செய்ய காத்திருக்கிறார்.