உண்மையான பிரச்சனையே நாங்க தான்… பாகிஸ்தான் அணிக்கு சர்பரைஸ் கொடுக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் குறித்து காண்போம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் எப்படியாவது பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்று இந்திய அணி பல்வேறு விதமான திட்டங்களை தீட்டி வருகிறது.

அந்த வரிசையில் பாகிஸ்தான் அணி எதிர்ப்பாராத விதம் இந்திய அணி களமிறக்க வாய்புள்ள மூன்று இளம் வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

ரவி பிஸ்னாய்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் திட்டத்தை வைத்திருந்தால், நிச்சயம் ரவி பிஸ்னாய் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவருடைய பந்துவீச்சு மைதானத்தில் பட்டவுடன் பேட்ஸ்மேன்களுக்கு மிக விரைவாக செல்வதால், இவருடைய பந்துவீச்சை பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இவரை களமிறக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.