இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேனான இந்த தொடர் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த பல வருடங்களைப் போல அல்லாமல் இந்திய அணி ஒரு திறம் வாய்ந்த சிறந்த டெஸ்ட் அணியை கொண்டு சென்றுள்ளது.
இதனால் இரு அணிகளும் மிகச் சரியாக வெற்றியை நோக்கி போராடும் என்பதில் எந்த ஒரு மாறுக்கருத்தும் இல்லை. இந்திய அணியை பொருத்த வரை துவக்க ஆட்டக்கரர்களாக சிகர் தவான், முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருடான் சென்றுள்ளது. கேப்டனாக விராட் கோலி, துணைக் கேப்டன் அஜிங்கியா ரகானே மிடில் ஆடரிலும் உள்ளனர். கடைசியாக பினிசிங் செய்ய ஹர்திக் பாண்டிய மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும், கீப்பராக வ்ரித்திமான் சகா மற்றும் பர்த்திவ் பட்டேல் ஆகியோரும் உள்ளனர்.
ஸ்பின் டிப்பர்ட்மெண்டில் ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின் மற்றும் யூஜவேந்திர சகால் ஆகியோரும். வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இதில் ஜடேஜா காய்ச்சல் காரணமாக அங்கு மருத்துவமனையில் உள்ளார். இதனால் அவருக்கு தேர்வில் வாய்ப்பில்லை.
தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் சிறந்த இந்திய அணியை காண்போம் :
1.முரளி விஜய்
2010ல் இருந்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒப்பானராக இருந்து வருகிறார். சென்ற முறை தென்னாப்பிரிக்க சென்றிருந்த போது முதல் ஆட்டத்திலேயே 97 ரன் அடித்து வெறும் 3 ரணில் தன் சதத்தை தவற விட்டார்.
அதனைவிட தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்த அற்புதமாக ஆடிக்கொண்டிருக்கிறார் விஜய்.