இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த அந்த அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
தர்மசாலாவில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி மொகாலியில் நாளை நடக்கிறது.
முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் 10ஆம் தேதி மலை பிரதேசமான இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி முடிந்து இரண்டே நாட்களில் அடுத்த ஒருநாள் போட்டி பஞ்சாபில் உள்ள மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்ததும. இதற்காக இந்திய அணி போட்டி முடிந்ததும் விமானம் மூலம் மொஹாலி சென்றது. இந்நிலையில் மழையால் இன்னும் மொஹாலி செல்லாமல், தர்மசாலாவில் மாட்டிக்கொண்டனர் இலங்கை அணியினர்.
ஆனால் இலங்கை அணி அவர்களுடைய தனி விமானம் மூலம் மொஹாலி பயணம் செய்ய இருந்தது. சரியாக அவர்கள் விமான நிலையம் சென்றவுடன் எதிர்பாராத வகையில் வானிலை மாறி பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் விமானங்கள் ஏறவோ அல்லது தரையிறங்கவோ இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஹிமாச்சல் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் மாட்டிக்கொண்டனர். அதன் பின்னர் கடுப்பான இலங்கை அணியினர் மீண்டும் அணியின் ஹோட்டலுக்கு வந்துவிட்டனர். இதன் காரணமாக இன்று (டிச.12) விமானம் மூலம் மொஹாலி செல்கின்றனர்.
இது குறித்து, ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோகித் சூட் கூறியதாவது,
இதுவரை பல போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை எதிர்பாராத வகையில் இப்படி நடந்துவிட்டது. தற்போது (டிச.11) இலங்கை அணியினரை ஹோட்டலிலேயே தங்க வைக்க முடிவு செய்துள்ளோம். இன்று அல்லது நாளை காலை வரை நேரம் இருக்கிரது. அதற்குள் அவர்களை விமானம் மூலம் அனுப்பிவிடலாம். அப்படி இல்லை எனில், பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். இங்கிருந்து மொகாலிக்கு கிட்டத்தட்ட 220 முத்தம் 240 கி.மி வரை இருக்கும் கிட்டத்தட்ட 8 முதக் 9 மணி நேரம் வரை தரை பயணம் செய்ய வேண்டும். இதனால் பஸ்ஸில் பயணிக்க முடியாது எனக் கூறிவிட்டனர் இலங்கை அணியினர்.
எனக் கூறினார் மோகித் சூட்.