இலங்கையை துடைத்தெடுக்குமா இந்தியா?
இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் அசட்டயாக வென்று ஒரு நாள் தொடரிஉல்ம் த்னது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது இந்திய அணி. இன்று கடைசி மற்றும் 5ஆவது ஒரு நாள் போட்டி இலங்கையின் கொலும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் வென்று, இலங்கையை துடைத்தெடுக்குமா என்ற ஆவல் இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
5ஆவது போட்டி
இன்று மதியம் நடக்கும் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிகர் தவான் பங்குபெற மாட்டார் என பி.சி.சி.ஐ செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அவரது தாய்க்கு உடல் நிலை சரியிள்ளாத காரணத்தால் அவருக்கு உதவ இந்திய சென்றுவிட்டார் சிகர் தவான்.
சிகர் இல்லை
மேலும், அவர் டி20 தொடரிலும் பங்குபெற மாட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு பதில் அஜிங்க்யா ரகானே ஓப்பன் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பார்த்தால் சற்று பிரமாதமாகத் தான் உள்ளது.
இந்திய மிடில் ஆர்டர்
மிடில் ஆடர் தான் சற்று சொதப்பும் நிலையில் உள்ளது. கே.எல் ராகுல் சிறிது சோபித்தால் அந்த பிரச்சனையும் தீர்ந்துவிடும் இதனால் பின்னர் வரும், தோனி சற்று நிம்மதியாக ஆடுவார்.
தற்போது மனீஷ் பாண்டே கடந்த போட்டியில் அரை சதம் அடித்து இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் நம்பிக்கைஅயை கொடுத்துள்ளார்.
அதற்க்கு பின் வரும் பாண்ட்யா சொல்லவே தேவையில்லை, நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால், கடந்த போட்டியில் 4ஆவது விக்கெட்டிற்க்கு இறக்கி விடப்பட்ட அவர் அந்த வாய்ப்பை சரியாக பயண்படுத்தவில்லை.
பந்து வீச்சில் இந்திய மிக மிக முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஜஸ்பிரிட் பும்ரா 4 போட்டிகளுக்கு 13 விக்கெட்டுக்ளை வீழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியிலும் ஸ்ரதுல் தகூர் ஆட வாய்ப்பு அளிக்கப்படலாம் எனதெரிகிறது.
இலங்கை சோகம்
இலங்கை அணியை பொருத்த வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தோற்று சற்று நம்பிக்கை இழந்து தான் உள்ளது.
இந்த போட்டியிளாவது வெர்று பெற்று தனது மாண்பையாவது தக்கவைக்கும என இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலில், உபுல் தரங்கா பின்னர் சமரா கபுகேதரா என இரு கேப்டன்களும் காயத்தால் வெளியேற தற்போது நடப்பு கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா செயல்பட்ட்டு வருகிறார்.
பந்து வீச்சு பேட்டிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது இலங்கை அணி. சென்ற போட்டியில் இலங்கையின் ஃபீல்டிங்கும் மிக மோசமாக தான் இருந்தது.
இலங்கை அணி கேப்டன் மலிங்கா இது பற்றி கூறுகையில்,
எங்களது அணியில் திறமை இருக்கிறது. ஆனால், அனுபவம் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டிற்க்குல் நுழைகின்றனர். அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது.