ஐ.பி.எல் 2018 முதல் போட்டி; மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னை அணியின் ஆடும் லெவன்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த போட்டியில் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
முரளி விஜய்;
தமிழக வீரரான முரளி விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த முறையும் தனது அணியில் எடுத்து கொண்டது. இவரே சென்னை அணிக்கு துவக்கம் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.