முதல் போட்டியில் முடி சூட போவது யார்..? வரலாறு சொல்வது என்ன !!

முதல் போட்டியில் முடி சூட போவது யார்..? வரலாறு சொல்வது என்ன

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் குறைந்தது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியது. இதே பெருமையை தக்கவைக்க வேண்டும் என்பதில் சென்னை அணி தீவிரமாக இருக்கிறது. ஆனால் அணியில் 11 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களால் முழு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்று பரவலான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை நிரூபித்து காட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2013, 2015, 2017-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குணால் பாண்ட்யா, இறுதிகட்டத்தில் மிரட்டலாக பந்து வீசக்கூடிய ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள். சொந்த ஊரில் ஆடுவது மும்பை அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் பொதுவாக மும்பை அணி தடுமாற்றத்துடன் தொடங்கியே எழுச்சி பெறுகிறது. கடைசியாக ஆடிய 5 சீசன்களில் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியே சந்தித்து இருக்கிறது. இந்த முறை அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10-ல் சென்னையும், 12-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் 5-ல் மும்பை அணியும், 2-ல் சென்னையும் வெற்றி பெற்று இருக்கிறது.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

இந்த ஐ.பி.எல். தொடரில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் ஆவது சுவாரஸ்யமான அம்சமாக இருக்கும். ஒரு இன்னிங்சில் இரு அணியும் தலா ஒரு முறை அப்பீல் செய்யலாம். அப்பீல் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.

இந்த போட்டிக்கான செனனை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி;

இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்சின் உத்தேச அணி;

Mohamed:

This website uses cookies.